மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், செவ்வாய்க்கிழமை இரவு டெலிவரி பாய் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென வழிமறித்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய முயன்றது. அந்த ஆபத்தான தருணத்தில், டெலிவரி பாய் சமயோசிதமாகச் செயல்பட்டு அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்தார்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த சிறுத்தை பின்னர் அருகிலுள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் புகுந்து, பின்பு அங்கிருந்து ஸ்ரீஜி வேலி பகுதி நோக்கி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை காரணமாகக் காட்டை விட்டு வழிதவறி சிறுத்தை மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
Leopard attacks on Blinkit Delivery guy at Night, somehow he escaped💀 pic.twitter.com/iehD3KfndG
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 8, 2026
“>
எனவே, அந்தப் பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அந்தச் சிறுத்தையைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
