ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மாதேஸ்வரன் (40)-கீதா (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாதேஸ்வரன் டைல்ஸ் மட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளனர். இதனால் விசேஷ  நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் கலந்து கொள்ளாமல் வீட்டிற்குள் இருந்த நிலையில் சம்பவ நாளில் மாதேஸ்வரன் தன் மனைவியுடன் சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய சகோதரரிடம் தனக்கு குழந்தை இல்லாததை கூறி மாதேஸ்வரன் அழுத நிலையில் சகோதரர் ஆறுதல் கூறிவிட்டு வெளியே சென்றார். இந்நிலையில் திடீரென தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சகோதரர் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

இது தொடர்பாக சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.