
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதேபோல் இப்போது பாம்பு, எலி மற்றும் தவளை குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவற்றில், 10 அடி நீளமுள்ள பாம்பின் மேல் 2 எலிகளும், தவளையும் சவாரி செய்வதை காணலாம். கற்பனை செய்ய முடியாத ஒரு காட்சி போன்று இது தெரிகிறது. இதற்கிடையில் அந்த பாம்பும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக தண்ணீரில் இருக்கிறது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram