மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் மாளிகப்புரம் என்ற பக்தி திரைப்படம் மலையாளத்தில் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இளம் பெண் ஒருவர் 2018 ஆம் வருடம் உன்னி முகுந்தன் தன்னை கதை விவாதத்திற்கு வரும்படி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில் முகுந்தன் தரப்பில் ஆஜரான வக்கீல் பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சமரசம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாக பத்திரத்தை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 2021 ஆம் வருடம் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அந்த பெண் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் எந்த சமரச கையெழுத்தும் போடவில்லை என வாக்குமூலம் கொடுத்தார். இதை தொடர்ந்து பத்திர தாக்கல் செய்ததாக உன்னை முகுந்தன் வக்கீலை நீதிமன்றம் கண்டித்தது. மேலும் தடை உத்தரவை நீக்கியது. உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் வருகின்ற 17ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.