திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஊராட்சி மடவிலாசம் காலனி பெருமாள் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர் நகர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி துரைராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.