வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான தமிழ்ச்செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதில் கணேஷ் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில் செய்து வருகிறார். இவர்களது காதல் குறித்து அறிந்த தமிழ்செல்வியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் கடந்த 22-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே தமிழ் செல்வியை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இருவீட்டு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.