விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.