சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ மக்களிடையே பெரிய விவாதமாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது சைக்கிளை மழையில் கூட எளிதாக ஓட்டிக்கொள்வதற்காக ஒரு யோசனையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக மழையில் சைக்கிளோ, இருசக்கர வாகனமோ ஓட்டுவது மிகவும் சிரமமான காரியம்.

ஆனால் இந்த சிறுவன் தனது சிந்தனையை பயன்படுத்தி, மழையிலும் சைக்கிளை சிரமமின்றி ஓட்டும் வழியை கண்டுபிடித்துள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் தனது சைக்கிளின் மீது ஒரு மூங்கில் குச்சியை பொருத்தி அதில் ஒரு தார்பாய் போர்வை போட்டிருப்பது தெரிகிறது. இதனால் மழையில் நனையாமல் சைக்கிளை ஓட்டுவதோடு, தன்னையும் தனது சைக்கிளையும் முழுமையாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். இந்த யோசனை மிகவும் எளிமையானதாக இருந்தாலும், அதே சமயம் பயனுள்ள ஒன்றாக இருப்பதால், அந்த வீடியோ மக்கள் முன் வெளிவந்தவுடன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சிறுவனின் இந்த திறமை காரணமாக, அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை flirtculture என்ற கணக்கு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இதனை ஆயிரக்கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர். மேலும், பலரும் கருத்துப் பகுதியில் பாராட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். ஒருவரோ, “என்ன சொன்னாலும், இந்த சிறுவனின் யோசனை அற்புதம்” என்று குறிப்பிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Flirtculture (@flirtculture)

இன்னொருவர், “அவசியம் கண்டுபிடிப்பின் தாய்” என்று பாராட்டினார். மேலும் ஒருவர், “இந்த பையனின் திறமை உண்மையிலேயே அற்புதங்களைச் செய்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.