அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா அதிமுகவை விமர்சிக்கக்கூடாது என பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அதிமுகவின் தலைமை பற்றியோ, அக்கட்சி தொண்டர்கள் பற்றியோ பாஜகவினர் யாரும் குறை சொல்லக்கூடாது. அக்கட்சியுடன் சுமூக உறவுகளையே வைத்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியுள்ளார். இதை மீறக்கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் ஜேபி நட்டா.