உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.  உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 15 வயது குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள், இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளன. இது போன்ற இன்னல்களை களையும் பொறுப்பு, பெண் குழந்தைகள் எதிர் கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது. இதற்காக தான் உலக பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மூலம் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் உள்ள பெண் குழந்தைகளுக்காக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

கல்வி, வேலை மற்றும் திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. இவற்றையெல்லாம் போக்கி பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகின்றனர். ஸ்விட்சர்லாந்து உள்ளிட்டா வளர்ந்த நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கான சம உரிமையை பேண வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாகவும் வலியுறுத்தல் ஆகவும் உள்ளது.