
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு மட்டுமின்றி கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்துதல், தவறான நிர்வாகம் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ஆம் தேதி போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியாவின் சாதனை படைத்த மல்யுத்த வீராங்கனைகளான வினோத் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவுக்கே பெருமை தேடி தந்த நம்முடைய மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்க்கும்போது நெஞ்சம் பதைக்கிறது. அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுவை அப்துல்லா அவர்கள் இன்று சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நம்முடைய மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
It is heartbreaking to see Indian Wrestlers who brought honour to India, are forced to protest, for safeguarding self respect in face of sexual harassment.
Today, on behalf of DMK, Thiru. @pudugaiabdulla MP, met them and expressed our solidarity. We will stand by our wrestlers…
— M.K.Stalin (@mkstalin) May 1, 2023