சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த நகை குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் உரியவரிடம் ஒப்படைத்தனர். அந்த நகை 6 சவரன் தங்க நகை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை காவல்துறையினர் பாராட்டினர்.