திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த வள்ளி செல்வம் தனது பத்து வயது மகளுடன் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தனது மனைவியும், மகளையும் தேடி பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து நம்பிராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காணாமல் போன தாய், மகளை தேடி வருகின்றனர்.