தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் சினிமாவை பொருத்தவரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. ஒரு கதையைக் கேட்கும் போது அது அற்புதமான கதையாக தோன்றும் ஆனால் நாம் சரியாக நடித்து முடித்து இருந்தாலும் திரையரங்கில் வெளியாகும் போது படம் அற்புதமானதாக தெரியாது. ஆனால் சாதாரண கதையாக இருக்கிறதே என்று தோன்றும் ஒன்று சூப்பர் ஹிட் படமாக இருக்கும்.

இது எனது அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட ஒன்றாகும். ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் உடன் நடித்த மொஹஞ்சதாரோ படத்தின் கதையைக் கேட்டு நான் வியந்து போனேன். சினிமா வாழ்க்கையின் ஆரம்பமே அற்புதமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. இதன் மூலம் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை யாராலும் கணிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு தோல்வியை பற்றி யோசிக்காமல் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.