
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, மகளிர் உரிமை தொகை வருதா ? இல்லையானு சந்தேகமா இருக்குது.. இது வரட்டும், நம்ம பதில் சொல்லுவோம். என்னாமோ நெறய கண்டிஷன் போடு இருக்காரு. கண்டிஷனை எந்த அளவுக்கு நிறைவேத்துவருனு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.
டிஐஜி மன நலம் பாதிக்கபட்டவர் என்று சொல்லாதீங்க… மன அழுத்தம் பாதிக்க பட்டவருனு சொல்லுங்க. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.அவர் ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி. இறந்த பிறகு ஒரு தவறான குற்றச்சாட்டு சொல்லுவது சரி அல்ல. நானும் முதலமைச்சரா ?இருந்தேன்.. இப்போ எதிர்க்கட்சி தலைவரா இருக்குறேன்.
காவல் பணி என்பது புனிதமான பதவி. மரியாதைக்குரிய இறந்த டி.ஐ.ஜி .திரு .விஜயகுமார் அவர்கள் நேர்மையான, திறமையான அதிகாரி. முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு அவர்கள் கடந்த மாதம் தான் நான் அவருக்கு விருது வாங்குனேனு சொன்னாரு, அப்படி திறமையாக பணிபுரிந்த அதிகாரி மன அழுத்தத்தால் இறந்தார் என்று உயர் அதிகாரி சொல்லுறாங்க.
அப்படி மன அழுத்தத்தில் இருக்கின்றவருக்கு எதுக்கு பணி கொடுக்குறீங்க. அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சொல்லுறாங்க, அதுல தான் சந்தேகம் ஏற்படுத்துது. அப்படி இருக்குறவருக்கு முழுமையான ஒய்வு கொடுத்து, அதற்கு உரிய சிகிச்சை அளிக்க பட்டு இருக்க வேண்டும். அதற்குத்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு இருந்த போது,
பெங்களூர் இமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து காவலர் நலவாரிய திட்டத்தை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்கு அந்த சிகிச்சை அளித்தோம். அவர்களுக்கு மட்டும் அல்ல 1 ½ லட்சம் பேருக்கு கொடுத்து இருக்கிறோம். அந்த காவலர் குடும்பத்துக்கும் கொடுத்தோம். இதனால் அவர்களுடைய மன அழுத்தம் குறைக்க பட்டது. அதிலிருந்து அவர்கள் விடுபட்டு வந்தார்கள் என தெரிவித்தார்.