தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று சென்னையில் தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. அதிக தொழில்முனைவோர் கொண்ட எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

நம்முடைய நாடு வளர்ச்சியடைய வேண்டும் எனில் இங்கு வசிக்கும் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.