
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோயில் உள்ள சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆகாஷ் வழக்கம் போல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததாக ஆசிரியை மாணவர் கண்டித்துள்ளார். அதோடு அவரை வகுப்பை விட்டு வெளியே நிற்க கூறியுள்ளார். இதனால் மனம் உளைச்சலுக்கு ஆளான மாணவர் பள்ளியின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
மாணவரை, ஆசிரியர்கள், மாணவர்கள் மீட்டனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வலது கையிலும், இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.