பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. ரோஜா தொடர் முடிவடைந்த பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்ற சீரியலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். இந்த தொடர் இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா நல்காரிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றதால் தற்போது அவர் சீதாராமன் சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகை பிரியங்கா சீதாராமன் சீரியலில் விருப்பப்பட்டு தான் நடிப்பதாகவும் அவர் சீரியலில் இருந்து விலக மாட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் எது உண்மை என்பது  இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.