விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சேர்ந்த ஒரு தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பேர் காணாமல் போன நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது சேத்துரைச் சேர்ந்த ராமுதாய் என்பவர் தன்னுடைய மகள் நிஷா (6) மற்றும் வர்ஷா (3) ஆகியோருடன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.