கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்று இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி காலகட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள். எதற்காக நாங்கள் இதை சொல்கிறோம்.

கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான். இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இன்று திருப்பூரில் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி செல்கின்றது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டால் பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாகத்தான் உள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. திமுக கட்சி அகற்றப்படுவது உறுதி என்று தெரிவித்தார்.