நீதிமன்ற அறைக்குள் கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் ஒருவருக்கொருவர் எதிராக வழக்குகளை தாக்கல் செய்த நிலையில், அவர்களது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அங்கு நீதிபதி அவர்களின் வாதங்களைக் கேட்க முன்வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது வன்முறை மோதலில் வெடித்தது.

இதில் மனைவி கூச்சலிடுவதையும், உடல் ரீதியாகத் தாக்கி கொண்டும் கன்னத்தில் மனைவி கணவனுக்கு பளார் என அறைவிட அங்கிருந்த வழக்கறிஞர் தலையிட்டு, அவர்களை நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியும், நீதிமன்றத்தில் சண்டை தொடர, இறுதியில் அதிகரித்து வரும் சூழ்நிலையைத் தீர்ப்பதற்கு காவல்துறையின் ஈடுபாட்டைப் நீதிபதி பரிந்துரைத்தார்.இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வியப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்ட இந்தச் சம்பவம், சட்ட அமைப்பின் மூலம் தகராறுகளைத் தீர்க்க முயற்சிக்கும் போது எழக்கூடிய சவால்கள் குறித்து மக்களுக்கு காட்டுகிறது.