சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரக்கூடிய பயணிகளின் வசதிக்கேற்ப சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் “செக்-இன்” வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த புதிய நடைமுறையானது மார்ச் முதல் சோதனை முறையாக செயல்படுத்தப்படும்.

அப்போது எந்தெந்த மெட்ரோ ரயில் நிலைங்களில் “செக்-இன்” வசதி உள்ளது என்பது பற்றி அறிவிக்கப்படும். வரும் ஏப்,.14-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கான செக்-இன் வசதி முழுமையாக செயல்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பயணிகளின் தேவையை கருதி கூடுதல் மெட்ரோ நிலையங்களுக்கு செக்-இன் வசதி மேலும் விரிவுபடுத்தப்படும். ஆன்லைன் முன் பதிவு இணையத்தில் விமான நிலையம் (அ) மெட்ரோ ரயில் நிலையத்துக்கான “செக்-இன்” வசதி விருப்பம் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.