மே 16  கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார்.

1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது.

1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.

1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.

1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர்.

1770 – 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார்.

1811 – கூட்டுப் படைகள் (எசுப்பானியா, போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.

1812 – உருசியப் படைத் தளபதி மிக்கைல் குத்தூசொவ் புக்கரெஸ்ட் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். உருசிய-துருச்சிப் போர் (1806–12) முடிவுக்கு வந்தது. பசராபியா உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.

1874 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மில் ஆறு பெருக்கெடுத்தில் நான்கு கிராமங்கள் அழிந்தன. 139 பேர் உயிரிழந்தனர்.

1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1891 – செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.

1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.[1]

1916 – பிரித்தானியாவும் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசுப் பகுதிகளான ஈராக்கு மற்றும் சிரியாவைப் இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.

1920 – உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1929 – ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1960 – கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

1966 – சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.

1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.

1974 – சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.

1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.

1991 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

1997 – சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.

2003 – மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.

2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1845 – இலியா மெச்னிகோவ், நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916)

1886 – ஏர்னெஸ்ட்டு பர்கெசு, அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1966)

1904 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989)

1905 – ஹென்றி ஃபோன்டா, அமெரிக்க நடிகர் (இ. 1982)

1925 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (இ. 2018)

1931 – கே. நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி

1935 – வீ. செல்வராஜ், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)

1950 – யிகான்னசு பெட்நோர்ட்சு, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்

1953 – பியர்ஸ் புரோஸ்னன், அயர்லாந்து-அமெரிக்க நடிகர்

1977 – கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்

1981 – சாயா சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1620 – வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564)

1830 – ஜோசப் ஃபூரியே, பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768)

1934 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1854)

1947 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861)

1948 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869)

2004 – கமலா மார்க்கண்டேய, இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924)

2007 – கு. கலியபெருமாள், தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924)

2010 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (பி. 1947)

2013 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933)

2014 – அமலெந்து டே, இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (மலேசியா)