மார்ச்சு 23 கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது.

1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது.

1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.[1]

1821 – விடுதலைக்கான கிரேக்கப் போரில் கலமட்டா நகரம் வீழ்ந்தது.

1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர்.

1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.

1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் இடையே முதலாவது போர் நடைபெற்ரது.

1885 – சீன-பிரெஞ்சுப் போர்: வடக்கு வியட்நாம், உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது.

1889 – மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முசுலிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.

1901 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் அரசுத்தலைவர் எமிலியோ அகுயினால்டோ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

1918 – முதலாம் உலகப் போர்: செருமனியின் மூன்றாம் நாள் தாக்குதலில், பிரித்தானியாவின் 10-வது அரச மேற்கு கெண்ட் இராணுவப் பிரிவில் பெரும்பாலானோர் போர்க் கைதிகலாகப் பிடிபட்டனர்.

1919 – இத்தாலியின் மிலன் நகரில் பெனிட்டோ முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

1933 – இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1939 – அங்கேரிய வான் படைகள் சிலோவாக் வான் படையினரைத் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். சிலோவாக்-அங்கேரியப் போர் ஆரம்பமானது.

1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை சப்பானியர் கைப்பற்றினர்.

1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.

1965 – நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.

1978 – லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சல்வடோர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

1991 – சியேரா லியோனியில் 11-ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1994 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில், தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

1994 – சைபீரியாவில் உருசியாவின் ஏரோபுலொட் 593 விமானம் வீழ்ந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

1996 – சீனக் குடியரசில் அரசுத்தலைவருக்கான முதலாவது நேரடித் தேர்தல் இடம்பெற்றது. லீ டெங்-உய் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1999 – பரகுவையின் துணை அரசுத்தலைவர் லூயிசு மரியா அகானா கொல்லப்பட்டார்.

2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

2008 – இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாதில் திறக்கப்பட்டது.

2018 – பெருவின் அரசுத்தலைவர் பெத்ரோ குக்சீன்சுக்கி பதவியில் இருந்து விலகினார்.

2019 – நான்கு ஆண்டுகள் சண்டையின் பின்னர், அமெரிக்க-ஆதரவு “சிரிய சனநாயகப் படைகள்” இசுலாமிய அரசு மீதான வெற்றியை அறிவித்தது.

இன்றைய தின பிறப்புகள்

1614 – சகானாரா பேகம், முகலாய இளவரசி (இ. 1681)

1749 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827)

1858 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1941)

1869 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1964)

1882 – எம்மி நோய்தர், யூத செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1935)

1887 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர், சிற்பி (இ. 1927)

1893 – கோபால்சாமி துரைசாமி நாயுடு, இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1974)

1907 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர், கல்வியாளர் (இ. 1992)

1908 – ச. அ. தர்மலிங்கம், யாழ்ப்பாண மருத்துவர், அரசியல்வாதி

1910 – ராம் மனோகர் லோகியா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1967)

1910 – அகிரா குரோசாவா, சப்பானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1998)

1912 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய இயற்பியலாளர், ஏவூர்திப் பொறியியலாளர் (இ. 1977)

1916 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2008)

1921 – லக்ஷ்மி, தமிழக எழுத்தாளர் (இ. 1987 )

1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்

1924 – பெட்டி நெசுமித் கிரகாம், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1980)

1924 – ஒல்கா கென்னார்ட், ஆங்கிலேயப் படிகவியலாளர்

1929 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய ஓட்ட வீரர், மருத்துவர்

1937 – ராபர்ட் கால்லோ, அமெரிக்க மருத்துவர், கல்வியாளர்

1948 – வசீம் பாரி, பாக்கித்தானியத் துடுப்பாளர்

1951 – செந்தில், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்

1953 – கிரன் மசும்தார் ஷா, இந்திய விலங்கியலாளர், தொழிலதிபர்

1976 – இசுமிருதி இரானி, இந்திய நடிகை, அரசியல்வாதி

1979 – விஜய் யேசுதாஸ், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1986 – கங்கனா ரனாத், இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

1555 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)

1801 – முதலாம் பவுல், உருசியப் பேரரசர் (பி. 1754)

1922 – அ. குமாரசாமிப் புலவர், யாழ்ப்பாணப் புலவர் (பி. 1854)

1924 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1978)

1931 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)

1931 – சிவராம் ராஜகுரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)

1931 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)

1945 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1854)

1953 – ஆந்திரேயசு அவுசான்சு, இலாத்துவியப் படைத்தளபதி, நிலக்கிடப்பியலாளர் (பி. 1871)

1960 – சைத் நுர்சி, குர்திய இறையியலாளர், கல்வியாளர் (பி. 1878)

1981 – பியேத்ரிசு தின்சுலே, ஆங்கிலேய-நியூசிலாந்து வானியலாளர் (பி. 1941)

1992 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய பொருளியலாளர் (பி. 1899)

2000 – ரொபின் தம்பு, இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1930)

2000 – ஆன்றணி படியற, இந்திய கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (பி. 1921)

2011 – எலிசபெத் டெய்லர், அமெரிக்க-பிரித்தானிய நடிகை, மனிதவுரிமையாளர் (பி. 1932)

2012 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (பி. 1940)

2015 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (பி. 1923)

2022 – மாடிலின் ஆல்பிரைட் அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (பி. 1937)

இன்றைய தின சிறப்பு நாள்

பாக்கித்தான் தேசிய நாள்

உலக வானிலை நாள்