சனவரி 3  கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை.

1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.

1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.

1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.

1777 – பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.

1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.

1833 – போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.

1848 – லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார்.

1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.

1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

1888 – 91 சமீ யேம்சு லிக் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் முறிவுத் தொலைநோக்கி ஆகும்.

1911 – உருசிய துர்க்கெசுத்தானின் அல்மாத்தி நகரை 7.7 அளவு நிலநடுக்கம் தாக்கி அழித்தது.

1919 – பாரிசு அமைதி மாநாட்டில், ஈராக் அமீர் முதலாம் பைசல், சியோனிசத் தலைவர் சைம் வெயிசுமன் உடன் பலத்தீனத்தில் யூதப் பகுதியை அமைக்க உடன்பட்டார்.

1921 – துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

1924 – பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

1925 – இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.

1932 – ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1932 – பிரித்தானிய ஆட்சியாளர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

1956 – ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1959 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.

1961 – பனிப்போர்: கியூபா அமெரிக்கச் சொத்துகளைத் தேசியமயமாக்கியதை அடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.

1961 – இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1962 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.

1966 – இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின.

1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.

1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1990 – பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1993 – மாஸ்கோவில் அமெரிக்கத் தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் போர்த்தந்திர படைக்கலக் குறைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

1994 – முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.

1994 – உருசியாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2002 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் படைகள் செங்கடலில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களுடன் பாலத்தீன சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றின.

2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.

2015 – போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.

2016 – சியா மதகுரு நிம்மர்-அல்-நிம்மர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவைத் துண்டித்தது.

இன்றைய தின பிறப்புகள்

கிமு 106 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. கிமு 43)1753 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னர் (இ. 1805)

1760 – கட்டபொம்மன், பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)

1793 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1880)

1831 – சாவித்ரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1897)

1840 – தந்தை தமியான், மதப்பரப்புனர் (இ. 1889)

1863 – சுவாமி துரியானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர், துறவி (இ. 1922)

1883 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1967)

1892 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1973)

1906 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1994)

1920 – அப்பாஸ் அலி, இந்திய தேசிய ராணுவ வீரர் (இ. 2014)

1925 – புஷ்பவல்லி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1991)

1929 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1989)

1930 – ஐ. எஸ். முருகேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், மோர்சிங் இசைக் கலைஞர் (இ. 2014)

1945 – நாராயணசாமி சீனிவாசன், இந்திய தொழிலதிபர்

1953 – முகமது வாகித் அசன், மாலைத்தீவின் 5வது அரசுத்தலைவர்

1956 – மெல் கிப்சன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகர்

1966 – செட்டன் சர்மா, இந்தியத் துடுப்பாளர்

1969 – மைக்கேல் சூமாக்கர், செருமானிய பார்முலா 1 வீரர்

1976 – நிக்கோலஸ் கோன்சலேஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1990 – சைந்தவி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி

இன்றைய தின இறப்புகள்

236 – அந்தேருஸ் (திருத்தந்தை)1641 – செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1618)

1795 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (பி. 1730)

1871 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, இந்திய மதகுரு, புனிதர் (பி. 1805)

1972 – பொ. வே. சோமசுந்தரனார், தமிழக உரையாசிரியர்; நாடகாசிரியர் (பி. 1909)

1992 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (பி. 1911)

1997 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1917)

2002 – சதீஷ் தவான், இந்தியப் பொறியாளர் (பி. 1920)

2013 – எம். எஸ். கோபாலகிருஷ்ணன், இந்திய வயலின் கலைஞர் (பி. 1931)

2014 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)

2018 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்

1966 புரட்சி நினைவு நாள் (புர்க்கினா பாசோ)