தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான சூர்ய வம்சம் திரைப்படத்தின் வாயிலாக திரையுலகில் அறிமுகமானவர் லாவண்யா. இதையடுத்து ரஜினியின் படையப்பா படத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றார். அதன்பின் ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன் உட்பட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அருவி தொடரில் நடித்து உள்ளார். இவருக்கு சமீபத்தில் பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடந்தது.

இதனிடையே அவருடைய திருமண போட்டோஸ் வெளியான நிலையில், 44 வயதில் நடிகையின் கல்யாணம் என்று செய்தி பரவியது. இந்நிலையில்லாவண்யா பேட்டி ஒன்றில் கூறியதாவது, நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் அப்படியே தள்ளிக்கொண்டு போய் விட்டது. என் குடும்பம் தான் எனக்கு மிகப் பெரிய பலம். ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனும் கேள்வியை நான் எதிர்கொண்டதில்லை. தனக்கு 43 வயதுதான் ஆகிறது என கூறியுள்ளார்.