திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முழுப்பெரும்பான்மை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் வளர்ச்சி முயற்சிகளை கட்டியெழுப்ப அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை வளமானதாக மாற்றுவதற்கான ஆணையை பாஜக நாடுகிறது என்று கூறினார்.

திரிபுராவில் தொங்கு சட்டசபை சாத்தியம் என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா, திரிபுராவில் உள்ள தொகுதிகள் சிறியவை என்றும், வாக்கு எண்ணிக்கை நாளில் மதியம் 12 மணிக்கு முன்னதாகவே பாஜக பெரும்பான்மையை எட்டியிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் கூறினார். கடந்த தேர்தலில் பாஜகவின் `சலோபல்தாய்’ முழக்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கான முழக்கம் அல்ல, திரிபுராவின் நிலைமையை மாற்றுவதற்கான முழக்கம் என்றும் அவர் கூறினார். திரிபுராவில் 1978-ம் ஆண்டு முதல் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி முன்னணி அரசை 2018-ம் ஆண்டு அகற்றி பாஜக சாதனை படைத்தது.

மாநிலத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக 55 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) மீதமுள்ள 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸும் சிபிஎம்-மும் கைகோர்ப்பது பாஜகவைத் தாங்களாகவே தோற்கடிக்கும் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது என்றும், அது கட்சிக்கு மிகவும் நல்ல நிலை என்றும் ஷா கூறினார்.