இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட சூட்டிங் ஒன்றில் பங்கேற்று நடித்து வருகிறார். அதன்படி ஐதராபாத் நகரில் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, அவருக்கு வலதுப்பக்க இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு தசை பகுதியும் பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவர் உடனே ஐதராபாத் நகரிலுள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அதன்பின் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து அமிதாப் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில் “உங்களின் அக்கறைக்கும், அன்புக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையின் வாயிலாக நான் குணமாகி வருகிறேன். அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.