பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி 350 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இரண்டாம் பாக சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் புஷ்பா 2 படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்துள்ளது.

ஷூட்டிங் நிறைவடைந்து துணை நடிகர்கள் ஒரு பேருந்தில் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நடிகர்கள் சென்ற பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 2 நடிகர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.