பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் புரிந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் மற்றும் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதேப்போன்று நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் திரிஷாவிடம் சொன்ன போது முதலில் நந்தினியாக நடிக்க தான் திரிஷா ஆசைப்பட்டுள்ளார். மணிரத்தினத்திடம் குந்தவைக்கு பதிலாக நந்தினியாக நடிக்கிறேன் என த்ரிஷா கேட்டுள்ளார். ஆனால் மணிரத்தினம் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். இதனையடுத்து தான் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்டார். மேலும் இந்த தகவலை நடிகை திரிஷாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.