
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது அவர் JEE தேர்வுக்காக பதிவு செய்துள்ளார். அதன்படி JEE அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்நிலையில் சேலம் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த மாணவிக்கு ரூ. 5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை வழங்கினார். அதோடு ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியையும் அவர் வழங்கினார். இந்த வீடு தொல்குடி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அப்பெண்ணுக்கு பாராட்டுக்களை தெரிவித்து மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிலையில் மாணவி ராஜேஸ்வரி, அப்பா ஸ்தானத்திலிருந்து முதலமைச்சர் உதவியதாக கூறி நன்றி தெரிவித்துள்ளார்.