
திருச்சி பச்சைமலை தோனூர் மலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாநில அளவில் முதலிடம் பிடித்த அசத்தியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, உள்ளம் உவகையில் நிறைகிறது.
தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் – அதன் செயலாளர் இளங்கோ அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்! என்று கூறினார்.