நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது நாட்டுப்படகில் இருந்த கிளைட்டன் எதிர்பார விதமாக கடலில் தவறி விழுந்தார். இதன்பின் சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை தேடி பார்த்து கண்டுபிடிக்க இயலவில்லை.

இது பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று காலை அவரின் உடல் பிணமாக அப்பகுதியில் மிதந்தது. இதன்பின் மீனவர்கள் அவரின் உடலை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.