தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஒரு வருடங்கள் கழித்து தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தேர்வு எழுதிய 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் TNPSC குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். மத்திய அரசு தேர்வாணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை எனக் கூறிய அவர், மதிப்பீட்டு பணிகள் 80%க்கு மேல் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்