தமிழக அரசில் வனத்துறையின் உதவி வன பாதுகாவலர் தேர்வுக்கான காலி பணியிடங்களின் அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு மொத்தம் ஒன்பது காலி பணியிடங்கள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் தேர்வுகள் மே 3 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வனப்பணி உதவிவன பாதுகாவலர் பதவிக்கான முதல் நிலை கணினி வழி தேர்வு முற்பகலில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அதன் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in- என்பதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் தங்கள் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.