திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எனக்கு நேரம் போகவில்லை என்றால் சீமானின் பேச்சை தான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு பொதுவிழா மேடையில் அவர் கூறியதாவது, எங்க மச்சான் சீமானை நான் சொல்லவில்லை பாருங்க. எனக்கு பொழுது போகவில்லை எனில் அவருடைய பேச்சை தான் கேட்பேன். வீட்டிற்கு பின்னாடி 4 தக்காளி செடி நட்டு வைத்தால் நீ சாஸ் கம்பெனி ஓனர் ஆகி விடலாம் என்று கூறுவான். ஆமாங்க அவன் தான் சொன்னான். அவனுடைய யூடியூப் வீடியோவை எடுத்து பாருங்கள். பச்சை மிளகாய் செடி நட்டால் சில்லி சாஸ் கம்பெனி ஓனர் ஆகிவிடலாம் என்று கூறுவான். இதுவாவது பரவாயில்லை.

அவன் சும்மா உட்கார்ந்து இருந்தபோது கராத்தே போட்டிக்கு நடுவில் கொண்டு விட்டார்களாம். ஓடி ஓடி போறத பார்த்து எல்லோரும் சிரித்தார்களாம். ஆனால் அவன் பயந்து ஓடவில்லையாம். அதாவது அவனை சோர்வடைய வைத்து ஒரே அடி அடித்ததில் பச்சை பெல்ட் பிளாக் பெல்ட் எல்லாமே வாங்கிட்டாராம். இதுவாவது பாதி கற்பனை தான். இங்கிருந்து அடுத்து இலங்கைக்கு போயிட்டான். பிரபாகரனுடன் அவர் உட்கார்ந்து இருக்கும்போது மான்கறி சாப்பிடுகிறாயா இல்லை முயல் கறி சாப்பிடுகிறாயா என்று கேட்டார்களாம். ஏனெனில் மான்கறி மற்றும் முயல் கறி வேட்டையாடுவதற்காக தானே 18 பேருடன் காட்டுக்கு போனாங்க. எங்க அண்ணன் பிரபாகரன் உட்கார்ந்திருக்கும் போது திடீர்னு இலங்கை ராணுவம் வந்து துப்பாக்கியால் சடசடவென சுட ஆரம்பித்தார்களாம். ராணுவம் வந்து சுட்டுக் கொண்டிருக்கும்போது அதிலிருந்த விடுதலைப்புலிகள் சார் ஒரு செல்பி வேண்டும் என்று சீமானிடம் வந்து கேட்டார்களாம் என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/reel/DEowrn7v5o2/?utm_source=ig_web_copy_link