சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பாலா, இப்போது வணங்கான் எனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். இதையடுத்து இப்படத்திலிருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் இந்த படத்தை அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

வணங்கான் சூட்டிங் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் 3 தினங்கள் நடந்த நிலையில், துணை நடிகர்-நடிகைகளுக்கு கூறியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் காயமடைந்த லிண்டா, போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.