
சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர் லிப்டிங் போட்டியின் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தேசிய பவர் லிப்டிங் போட்டியின் நடுவராக நியமனம் செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இதுகுறித்து வீராங்கனை ஆர்த்தி அருண் கூறியதாவது, “இந்தப் பதவி எனக்கு கூடுதல் பொறுப்பை அளித்துள்ளது. மேலும் விளையாட்டு துறையில் என்னை போன்று பல பெண்கள் சாதிக்க வேண்டும்.
தலைமை பொறுப்புகளுக்கு வரவேண்டும். இதேபோன்று பல பெண்கள் விளையாட்டு துறையை வலுப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்”எனக் கூறியுள்ளார்.