மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த இயற்கை பேரிடரால் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் பலர் நீர் சூழ்ந்த இடத்தில் சிக்கித் தவித்தனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டாவைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா முயற்சி மேற்கொண்டார். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதி நீரால் சூழப்பட்டிருந்ததால், அங்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. இதையடுத்து, கயிறு கட்டி ஜிப்லைன் அமைப்பு மூலம் தனது உயிரைப் பணயம் வைத்து அவர் அந்தப் பகுதிக்குச் சென்றார்.
All Heroes don’t wear capes…
True Heroes are those that help people in the darkest of times. One such Hero was spotted swinging by a rope amidst the landslide affected North Bengal…
The incident took place in Nagrakata.
The person swinging by a rope over a gorge is 𝐃𝐫.… pic.twitter.com/SWLqgazHhO— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@DrRijuDutta_TMC) October 7, 2025
ஜிப்லைன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடைந்த டாக்டர் இர்பான், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தார். இந்த துணிச்சலான செயலைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல், கடினமான சூழலில் மக்களுக்கு உதவிய டாக்டர் இர்பானின் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த சம்பவம், மனிதநேயத்தையும் தொழில்முறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
