கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை.

இந்த நிலையில் புதுமண ஜோடிகள் நேரடியாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோலார் நகரிலுள்ள வினோப் நகர் வாக்குச்சாவடியில் புது மணமக்கள் வாக்குச்சாவடி எண் 240-ல் வாக்களித்தனர். அந்த புது மாப்பளையின் பெயர் மஞ்சுநாத் மற்றும் மணமகளின் பெயர் ரூபிணி. இவர்கள் திருமணம் முடிந்த கையோடு தங்களது ஜனநாயக கடமையை செலுத்தினர்.