
தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் 7,53,000 கோடி. இதுல சிம்பிளா சொல்லனும்னா…. ஒரு ஒரு தனி மனிதனுடைய தலையின் மீது….. குடும்பத்தில் இருக்கக்கூடிய தனி மனிதனுடைய தலையின் மீது….. 3 லட்சம் ரூபாய் கடன் இருக்கு.
ஒரு கடன்கார மாநிலமாக…. குடிகார மாநிலமாக….தமிழகத்தை முழுமையாக மாற்றிவிட்டு…. இன்னைக்கு முதலமைச்சர் அவர்கள் 2024 பாராளுமன்ற தேர்தல் நம்பி இருப்பது, ஒரு அமாவாசையும், ஒரு ஆயிரம் ரூபாயும். செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் பிறந்தநாள் விழா கொடுக்கிறோம்னு சொல்லிட்டு… 14ஆம் தேதி நிறைந்த அமாவாசை அன்னைக்கு கொடுத்தாங்க.. அமாவாசை நம்புறாங்க… ஆனால் அந்த சனாதன தர்மம் வேண்டாம்
கோயம்புத்தூர்ல கவுண்டம்பாளையம் தொகுதியில நின்னுகிட்டு, மருதமலை முருகன் அவரைப் பற்றி பேசாமல் சென்றால் தப்பாயிரும். 1962வரை முருகனை பார்க்க வேண்டும் என்றால் ? கரண்ட் கிடையாது. சாதாரணமா படிக்கட்டில ஏறனும். திமுக தன்னுடைய கொள்கைக்காக மருதமலை முருகன் அவர்களுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள்.
அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தது யாருன்னா..? சின்னப்ப தேவர் ஐயா… உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை பத்தி உங்களுக்கு தெரியும். தமிழகத்திலே சினிமாவிலே முக்கியமான படைப்புகளை செய்தவர். அவரே போயி முருகப்பெருமானுக்கு அவரே கரண்டு ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பார்த்து, மருதமலை முருகன் கோயிலுக்கு கரண்ட் வந்துச்சி என தெரிவித்தார்.