தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்துவரும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர், அவர்கள் ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். கமல்ஹாசன் தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே நற்பணி இயக்கமாக மாற்றினார். விஜய் மற்றும் அஜித்தை பொருத்தவரை ரசிகர்களிடம் அவர்களின் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவார்கள்.

குறிப்பாக அஜய், தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். இந்நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர்களை அதிகமாக மதிக்கின்ற நடிகர் யார் என்று தெரியுமா? என கேட்டபோது தன்னுடைய திரைப்படங்களுக்கு 190 ரூபாய் டிக்கெட்-ஐ 500, 1000 என விற்பவர்களை யார் தடுக்கிறார்களோ அவர்கள் தான் ரசிகர்களை மதிக்கக்கூடிய நடிகர்கள் எனக் கூறியிருந்தார்.