அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு கொடுக்க தவறிவிட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தமிழக காவல்துறை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது அரசின் மீதான அவப்பெயரை காட்டும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பொறுத்தவரை எந்தவித குழப்பமும் இல்லை. கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறினார். மேலும் கடந்த சில நாட்களாகவே அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது கூட்டணியில் விரிசல் இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தியுள்ளார்.