
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூபாய் 60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகமான சொத்து சேர்த்தாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் போடப்பட்ட வழக்கு விசாரணை 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது தற்போது 90% முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில், இந்த வழக்கில் எங்களையும் எதிர் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனு ஒன்றை தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக நடத்தப்பட்ட விசாரணை என்பது முழுமையாக நடைபெறவில்லை. இந்த வழக்கை முழுமையாக முடிப்பதற்கு முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே இந்த வழக்கில் எங்களையும் மனுதாரராக சேர்த்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், வரும் 1.11.2023க்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.