
டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, உத்தரபிரதேசத்தில் இருந்து ரூ.20 உளுந்து வாங்கி அதை ரூ.70 இங்கு விற்பனை செய்யும் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மருமகன் சபரிசன், முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சூழ்ச்சியே இந்த நிதிநிலை அறிக்கை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கும் பொதுமக்கள் ரூ.30 ஆயிரம் செலவு செய்யும் அளவில் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். அதோடு டிடிவி தினகரன் மற்றும் திமுகவும் மறைமுகமாக தொடர்பு வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.