தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து அதிர்ஷ்ட லட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் மீனாட்சி சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மீனாட்சி சுந்தரம் கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.