
நாகை மாவட்டத்தில் உள்ள வட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கி.குமார் 57 என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்படுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொடபள்ளி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர் அந்தப் பள்ளியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார தலைவராகவும் இருந்துள்ளார். இவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.