
நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி மற்றும் கேரளா, பெங்களூர் மாநிலங்களிலிருந்தும் விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்து கொண்டே உள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மாநாட்டிற்கு வந்த விஜயின் ரசிகைகள் மோனிகா,ஐசு, மோகனப்பிரியாவந்துள்ளனர். இதில் வங்கிபணியாளர் மோகனப்பிரியா கூறியதாவது, நான் சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகை. அவர் அரசியலில் களமிறங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிச்சயமாக விஜய் வெற்றி பெறுவார் மக்களுக்கான அனைத்து சேவைகளையும் செய்து கொடுப்பார் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் அரசியல் கட்சி தொடங்கிய உடனே எனது முகவரியை சென்னையில் உள்ள எனது பாட்டியின் வீட்டு முகவரிக்கு மாற்றிவிட்டேன். இப்போது அவரது முதல் மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் இங்கு வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது மிக பாதுகாப்பான, பிரம்மாண்டமான ஏற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. நாளை விஜயின் பேச்சை கேட்பதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.