
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் பிரபு(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி அங்குள்ள மையவாடியில் வைத்து கொன்று புதைத்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ்(30), ஷியாஷ்டன்(32) மற்றும் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி 3 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், அதே போன்று குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பரணி ஆகியோரை நீதிபதி பாராட்டினார்.