மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற மான் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் அந்தமானை பத்திரமாக மீட்டனர். அந்தமான் எப்படி வீட்டிற்கு உள்ளே சென்றது என்பது தெரியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டில் சாம்பல் நிற மான் புகுந்துள்ளது. எப்படி வெளியேறுவது என்றே தெரியாமல் வீட்டின் உள்ளேயே சுற்றி உள்ளது.

இந்த மான் வீட்டிற்குள் சுற்றுவதை பார்த்த அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அதிகாரிகள் வந்து அந்த மானை பத்திரமாக மீட்டனர். இதனை ஐஎப்எஸ் அதிகாரியான கௌரவ் ஷர்மா தனது ட்விட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளார். அதில் சுமார் ஆயிரம் பேர் இந்த மானை மீட்கும் பணியை நேரடியாக பார்த்ததாக பதிவிட்டுள்ளார். அந்தமானை முதலில் ஒரு பெரிய வலை ஒன்றை போட்டு பிடித்துள்ளனர். இதற்காக அங்கிருக்கும் மக்களின் உதவியும் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதன் பின் மான் பத்திரமாக மீட்கப்பட்டது.